உணவுத் தொழில் முனைவோருக்கு அதிரடி சலுகை இனி எப்எஸ்எஸ்ஏஐ சான்றிதழ் புதுப்பிக்கத் தேவையில்லை

உணவுப் பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனைக்குத் தேவையான எப்எஸ்எஸ்ஏஐ உரிமம் மற்றும் பதிவுச் சான்றிதழ்கள் இனி நிரந்தரமாகச் செல்லும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. குறிப்பிட்ட கால இடைவெளியில் சான்றிதழ்களை மீண்டும் மீண்டும் புதுப்பிக்க வேண்டிய அவசியம் இனி இருக்காது. உணவு சார்ந்த தொழில்களை எளிதாக்கவும், தேவையற்ற நிர்வாகச் சுமைகளைக் குறைக்கவும் இந்த முக்கிய சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த புதிய நடைமுறை வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதன் மூலம் சிறு மற்றும் குறு நிறுவனங்களுக்கான விதிமுறைகள் எளிமையாக்கப்பட்டுள்ளன. மேலும், ஆண்டு வருவாய் வரம்பு 12 லட்ச ரூபாயிலிருந்து 1.5 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அதிரடி மாற்றத்தால் தொழில் முனைவோர் அடிக்கடி அரசு அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் நீங்கி, தொழில் வளர்ச்சி மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.