ஷுப்மன் கிலுக்கு பெரிய அதிர்ச்சி உடல்நலக்குறைவால் துலீப் டிரோபியில் இருந்து விலகினார்

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனும், ஆசியக் கோப்பையின் துணை கேப்டனுமான ஷுப்மன் கில் தற்போது உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் ஆகஸ்ட் 28 முதல் பெங்களூருவில் நடைபெற உள்ள துலீப் டிரோபியில் வடக்கு மண்டல அணி கேப்டனாக விளையாட முடியாது என தகவல் வெளியாகியுள்ளது.

பிசிசிஐ உடற்கல்வி நிபுணர்கள் அவரை விளையாட வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளனர். இதனால் அணியின் தலைமை பொறுப்பை யார் ஏற்கப் போகிறார் என்பது கேள்வியாகியுள்ளது. துணை கேப்டனான அங்கித் குமார் கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளது. ஆனால் செப்டம்பர் 9 முதல் தொடங்கும் ஆசியக் கோப்பையில் கில் இந்திய அணியில் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *