ரோஹிங்கியா அகதிகளுக்கு ₹5 கோடி நிதி உதவி! வங்கதேசத்திற்கு ஆதரவு அளித்த நெதர்லாந்து

ரோஹிங்கியா அகதிகளுக்கு ₹5 கோடி நிதி உதவி! வங்கதேசத்திற்கு ஆதரவு அளித்த நெதர்லாந்து

மியான்மரில் இருந்து வந்த சுமார் 10 லட்சம் ரோஹிங்கியா அகதிகளுக்கு வங்கதேசம் அடைக்கலம் அளித்துள்ளது. கடந்த 18 மாதங்களில் மட்டும், மியான்மரின் ரக்கைன் மாநிலத்தில் அதிகரித்து வரும் மோதல்கள் காரணமாக, மேலும் 1.5 லட்சம் ரோஹிங்கியா அகதிகள் வங்கதேசத்திற்கு அடைக்கலம் தேடி வந்துள்ளனர். இந்த அகதிகளின் பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான தேவைகளுக்காக வங்கதேசத்திற்கு சர்வதேச உதவிகள் தொடர்ந்து கிடைத்து வருகின்றன.

இந்நிலையில், ரோஹிங்கியா அகதிகளுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க 5 லட்சம் யூரோக்கள், அதாவது 5 கோடி ரூபாய்க்கும் அதிகமான நிதி உதவியை நெதர்லாந்து அறிவித்துள்ளது. இது ஐக்கிய நாடுகள் அகதிகள் முகமைக்கு (UNHCR) வழங்கப்படும் என்று டாக்காவில் உள்ள நெதர்லாந்து தூதரகம் தெரிவித்துள்ளது. இந்த நிதி ரோஹிங்கியா அகதிகளின் பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளுக்குப் பயன்படுத்தப்படும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *