திலகம் மற்றும் பொட்டு விவகாரத்தில் சிக்கிய லென்ஸ்கார்ட், பங்குச்சந்தையில் ₹4,500 கோடி இழப்பு!

திலகம் மற்றும் பொட்டு விவகாரத்தில் சிக்கிய லென்ஸ்கார்ட், பங்குச்சந்தையில் ₹4,500 கோடி இழப்பு!

நாட்டின் முன்னனி கண்ணாடி நிறுவனமான லென்ஸ்கார்ட் சொல்யூஷன்ஸ், ஊழியர்களின் மத அடையாளங்கள் தொடர்பான சர்ச்சையில் சிக்கியுள்ளது. ஊழியர்கள் நெற்றியில் திலகம் அல்லது பொட்டு வைக்க தடை விதிக்கும் நிறுவனத்தின் பழைய உள்முறை வழிகாட்டுதல் ஒன்று சமூக வலைதளங்களில் பரவியதால் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பொதுமக்களின் இந்த அதிருப்தி மற்றும் புறக்கணிப்பு கோரிக்கைகள் திங்களன்று பங்குச்சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

சந்தை மதிப்பில் கடும் சரிவு திங்களன்று வர்த்தகத்தின் போது லென்ஸ்கார்ட் பங்குகள் சுமார் 5 சதவீதம் வரை சரிந்தன. இதனால் நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு ஒரே நாளில் 4,540 கோடி ரூபாய்க்கும் அதிகமாக குறைந்தது. கடந்த வார இறுதியில் 92,872 கோடி ரூபாயாக இருந்த நிறுவனத்தின் மதிப்பு, வர்த்தகத்தின் ஒரு கட்டத்தில் 88,331 கோடி ரூபாயாக சரிந்தது. பின்னர் பங்குகள் சற்று மீண்ட போதிலும், இந்த சர்ச்சை நிறுவனத்திற்கு பெரும் நிதி நெருக்கடியை உண்டாக்கியது.

நிறுவனத்தின் விளக்கம் மற்றும் மன்னிப்பு சர்ச்சை முற்றிய நிலையில், லென்ஸ்கார்ட் நிறுவனர் பியூஷ் பன்சால் பகிரங்கமாக மன்னிப்பு கோரினார். வைரலான அந்த ஆவணம் பழைய பதிப்பு என்றும், தற்போதைய நடைமுறைக்கு அது பொருந்தாது என்றும் அவர் விளக்கமளித்தார். தற்போது புதிய ‘இன்-ஸ்டோர் ஸ்டைல் கைடு’ வெளியிடப்பட்டுள்ளது. இதில் பொட்டு, திலகம், ஹிஜாப் மற்றும் தலைப்பாகை உள்ளிட்ட அனைத்து மத அடையாளங்களையும் ஊழியர்கள் அணிய நிறுவனத்தால் முழு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஒரு பார்வையில்

  • மத அடையாளங்களுக்கு தடை என்ற புகாரால் லென்ஸ்கார்ட் பங்குகள் 5% சரிந்தன.
  • ஒரே நாளில் நிறுவனத்தின் சந்தை மதிப்பில் 4,540 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.
  • சர்ச்சைக்குரிய கொள்கை பழையது என்று கூறி நிறுவனர் பியூஷ் பன்சால் மன்னிப்பு கேட்டார்.
  • புதிய விதிகளின்படி பொட்டு, திலகம், ஹிஜாப் அணிய ஊழியர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *