கர்ப்பிணி மனைவியை மலையிலிருந்து தள்ளிவிட்ட கணவன்! மனைவியின் வாக்குமூலத்தால் சிக்கிய கொலையாளி

கர்ப்பிணி மனைவியை மலையிலிருந்து தள்ளிவிட்ட கணவன்! மனைவியின் வாக்குமூலத்தால் சிக்கிய கொலையாளி

ஸ்காட்லாந்து நீதிமன்றம் ஒன்று, கர்ப்பிணி மனைவியைக் கொன்ற குற்றத்திற்காக காஷிஃப் அன்வர் என்ற நபருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. எடின்பர்க்கின் புகழ்பெற்ற ‘ஆர்தர்ஸ் சீட்’ மலையின் உச்சியில் அன்வர், தனது 17 வார கர்ப்பிணி மனைவியான ஃபாஸியா ஜாவேத்தை 50 அடி கீழே தள்ளிவிட்டான். நிரந்தரமாக அவளிடமிருந்து விடுபடலாம் என்று எண்ணினான். ஆனால், ஃபாஸியா இறப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு போலீசாரிடம் அளித்த வாக்குமூலம், அன்வரின் சதித்திட்டத்தை வெளிப்படுத்தியது.

ஃபாஸியா, அன்வரிடமிருந்து பிரிந்து செல்ல விரும்பியதால், கோபமடைந்து அன்வர் இக்கொடூரச் செயலில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும், நீதிமன்றத்தில் அன்வர் அதை ஒரு விபத்து என வாதிட்டான். ஆனால், சாட்சிகள் மற்றும் காவல்துறையின் வாக்குமூலங்கள், அவனது கூற்றை பொய்யென நிரூபித்தன. இறுதியில், நீதிமன்றம் அன்வரைக் குற்றவாளியாக அறிவித்து, குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *