‘ஹெபடைடிஸ் பி’ தடுப்பூசி விலை உயர்வு: பொதுமக்கள் கவலை

‘ஹெபடைடிஸ் பி’ தடுப்பூசி விலை உயர்வு: பொதுமக்கள் கவலை

குழந்தைகளின் கல்லீரல் ஆரோக்கியத்தை பாதுகாத்து, கல்லீரல் புற்றுநோய் உள்ளிட்ட நோய்களைத் தடுக்கும் ‘ஹெபடைடிஸ் பி’ தடுப்பூசி விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. இதனால், இதுவரை குறைந்த செலவில் இந்த தடுப்பூசியைப் பெற்றுவரும் நடுத்தர வர்க்கத்தினர் பெரும் சிக்கலில் உள்ளனர்.

முன்னதாக, ஒரு டோஸ் ₹20 முதல் ₹50 வரை விற்பனையாகி வந்தது. இது 3 தவணைகளாக செலுத்தப்படும் தடுப்பூசி என்பதால், முழுமையான தடுப்பு கிட்டத்தட்ட ₹60 முதல் ₹150 வரை இருந்தது. ஆனால், தற்போது ஒரே நேரத்தில் மூன்று டோஸ்களுக்கான விலை ₹1,700 வரை உயர்ந்துள்ளது.

இந்த திடீர் விலை உயர்வு பொதுமக்கள் மற்றும் மருத்துவ வல்லுநர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *