ஹார்முஸ் ஜலசந்தியில் எதிரி நாட்டு கப்பல்களை தடுப்பது ஈரானின் சட்டபூர்வ உரிமையா

ஹார்முஸ் ஜலசந்தியில் எதிரி நாட்டு கப்பல்களை தடுப்பது ஈரானின் சட்டபூர்வ உரிமையா

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடப்பதைத் தடுப்பது ஈரானின் சட்டபூர்வ உரிமை என்று அந்த நாட்டு வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி ஐநா சபையில் தெரிவித்துள்ளார். பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்திற்கு அமெரிக்காவும் இஸ்ரேலுமே காரணம் என்று அவர் குற்றம் சாட்டினார். மேலும், அமெரிக்கப் படைகள் பொதுமக்களை கேடயமாகப் பயன்படுத்துவதாகவும் அவர் புகார் அளித்துள்ளார்.

இந்த தடையால் உலகளவில் எரிசக்தி தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ள போதிலும், இந்தியா, ரஷ்யா மற்றும் சீனா போன்ற நட்பு நாடுகளின் கப்பல்கள் தடையின்றி செல்ல அனுமதிக்கப்படும் என்று ஈரான் உறுதி அளித்துள்ளது. கடல்சார் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுப்பதாக ஐநா பொதுச்செயலாளரிடம் கூறிய அராக்ச்சி, அதே வேளையில் எதிரி நாடுகளுக்கு எந்த சலுகையும் வழங்கப்பட மாட்டாது என்பதில் உறுதியாக உள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *