ஸ்மார்ட்போன் அபாயம்! விரலில் வலி, மரத்துப்போதல்: ‘நம்ப் தம்ப்’ நோயிலிருந்து உங்களைப் பாதுகாப்பது எப்படி?

தொடர்ச்சியான ஸ்மார்ட்போன் பயன்பாடு, இப்போது நம் கட்டை விரலுக்கு ஒரு தீவிர அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது—அதுதான் ‘நம்ப் தம்ப்’ (Numb Thumb) எனப்படும் நோய். பொழுதுபோக்கு மற்றும் தகவல் தொடர்புக்கு அதிகம் பயன்படுத்தப்படும் மொபைல் திரைகளால், கட்டை விரலில் முதலில் வலி தொடங்கி, பிறகு அது மரத்துப்போகும் நிலைக்குச் செல்கிறது. மருத்துவ உலகில் இதை ‘பிளாக்பெர்ரி சின்ட்ரோம்’ அல்லது ‘அளவுக்கு மீறிய பயன்பாடு சின்ட்ரோம்’ என்றும் அழைக்கின்றனர். இந்த நோயின் முக்கிய அறிகுறிகள் கட்டை விரல் அடிப்பகுதியில் வலி, அதை மடக்க சிரமம், மணிக்கட்டில் வலி மற்றும் பொருட்களை இறுக்கிப் பிடிக்க இயலாமை ஆகியவை ஆகும். ஆரம்ப நிலையிலேயே கவனம் செலுத்த தவறினால், நிலைமை மோசமடைந்து கட்டை விரல் செயல் இழக்கவும் வாய்ப்புள்ளது.
எலும்பு நோய் நிபுணர்கள், இந்த ஆபத்தைத் தவிர்க்க ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதை உடனடியாக குறைக்க அறிவுறுத்துகின்றனர். கட்டை விரலின் அடிப்பகுதியில் வலி அல்லது உணர்வின்மை போன்ற அறிகுறிகள் தோன்றினால், தாமதிக்காமல் மருத்துவரை அணுகுவது அவசியம். ‘நம்ப் தம்ப்’ சிகிச்சை முறையில் பெரும்பாலும் விரலுக்கு ஓய்வு அளித்தல், வலி நிவாரண மருந்துகள், இயன்முறை சிகிச்சை (Physiotherapy) மற்றும் சில பயிற்சிகள் ஆகியவை அடங்கும். இவை பலனளிக்காத பட்சத்தில், ஸ்பிளிண்ட் அணிவது அல்லது அறுவை சிகிச்சை மட்டுமே இறுதி தீர்வாக இருக்கும். மேலும், கட்டை விரலுக்கான வழக்கமான பயிற்சிகளை மேற்கொள்வது மற்றும் வைட்டமின் ஈ நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வது இந்த நோயைத் தடுக்க உதவும்.