வேகமெடுக்கும் கொரோனா.. முன்னெச்சரிக்கை அவசியம்

வேகமெடுக்கும் கொரோனா.. முன்னெச்சரிக்கை அவசியம்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் மீண்டும் பரவத் தொடங்கியுள்ள நிலையில், மக்கள் மத்தியில் கவலை அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னை நகரத்தில் நேற்று ஒருவர் கொரோனாவால் உயிரிழந்த தகவல் வெளியாகியதும், மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவ அதிகாரிகளின் தெரிவுப்படி, தற்போது பரவிவரும் கொரோனா வகை NB 1.8.1 என்பது உள்ளூர் பரவலுக்கே உரியதாகும். இதன் காரணமாக, கொரோனா வைரஸ் மீண்டும் தீவிரம் பெறக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

இதனைத் தடுக்கும் வகையில், பொதுமக்கள் முன்னெச்சரிக்கைகளை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பொதுநோக்கு இடங்களில் மாஸ்க் அணிவது, அடிக்கடி கைகள் மற்றும் கால்களை சுத்தம் செய்வது, திரளாக கூடுவதைக் தவிர்ப்பது போன்றவை மிகவும் அவசியமாகிறது. மேலும், காய்ச்சல், தொண்டை வலி, சளி, தும்மல் போன்ற அறிகுறிகள் உள்ளவர்கள் உடனே தனிமைப்படுத்திக் கொண்டு மருத்துவரை அணுக வேண்டும். பொதுமக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் நடந்து கொண்டாலே இந்த பரவலை கட்டுப்படுத்த முடியும்.

Tama Sarkar
  • Tama Sarkar

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *