விஷ்ணு சிலை பற்றிய CJI கருத்து! இந்து மத நம்பிக்கைகளை அவமதிக்க வேண்டாம் என விஸ்வ இந்து பரிஷத் கண்டனம்

விஷ்ணு சிலை பற்றிய CJI கருத்து! இந்து மத நம்பிக்கைகளை அவமதிக்க வேண்டாம் என விஸ்வ இந்து பரிஷத் கண்டனம்

கஜுராஹோவில் உள்ள விஷ்ணு சிலையை மீண்டும் நிறுவுவதற்கான மனு குறித்து இந்திய தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் சமீபத்தில் தெரிவித்த கருத்துக்கு விஸ்வ இந்து பரிஷத் (VHP) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்து மத நம்பிக்கைகளை கேலி செய்யும் கருத்துகளைத் தவிர்க்க வேண்டும் என்று அது வலியுறுத்தியுள்ளது.

இந்த மனுவை ‘விளம்பரத்துக்கான மனு’ என்று கூறி தலைமை நீதிபதி தள்ளுபடி செய்தார். “நீங்கள் விஷ்ணுவின் தீவிர பக்தர் என்றால், பிரார்த்தனை செய்து தியானம் செய்யுங்கள்” என்று அவர் கூறினார். இதற்கு பதிலளித்த விஸ்வ இந்து பரிஷத்தின் தேசிய தலைவர் அலோக் குமார், தலைமை நீதிபதியின் கருத்து இந்து மத நம்பிக்கைகளை கேலி செய்வதாக உள்ளது, இத்தகைய கருத்துகளைத் தவிர்ப்பது நல்லது என தெரிவித்தார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *