விராட் கோலிக்கு ஹர்பஜன் மகள் அனுப்பிய மெசேஜ்

இந்திய அணியின் முன்னணி வீரரான விராட் கோலியின் ஓய்வு அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், தனது மகள் ஹினயா கூட இந்த செய்தியை கேட்டு மிகுந்த வருத்தத்தில் ஆழ்ந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். “நான் ஹினயா… ஏன் ஓய்வை அறிவித்தீர்கள் விராட்?” என்று அவர் நேரடியாக கோலிக்கு ஒரு மெசேஜ் அனுப்பியதாக ஹர்பஜன் கூறினார்.
இதற்கு பதிலளித்த விராட் கோலி, “இதுதான் சரியான நேரம் மகளே,” என்று சிரித்தபடியே பதிலளித்துள்ளார். சிறுவயதிலிருந்தே கோலியின் ரசிகையாக இருந்த ஹினயா, அவரது ஓய்வு காரணமாக மனவருத்தத்தில் இருப்பது குழந்தைகளுக்கே கோலியின் தாக்கம் எவ்வளவு வலிமையானது என்பதை காட்டுகிறது. இந்நிகழ்வு, விராட் கோலியின் பிரபலத்தையும், அவர் கிரிக்கெட்டில் ஏற்படுத்திய தாக்கத்தையும் மீண்டும் ஒருமுறை நிரூபிக்கிறது.