வாக்காளர் அட்டையை ஆதாருடன் இணைக்கும் முடிவு: தேர்தல் ஆணையத்தின் புதிய நடவடிக்கை

இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் அடையாள அட்டை (EPIC) மற்றும் ஆதார் அட்டையை இணைக்கும் முடிவை அறிவித்துள்ளது. செவ்வாய்கிழமை நடைபெற்ற முக்கிய கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. தேர்தல் ஆணையம் கூறியதாவது, இந்திய அரசியலமைப்பின் 326வது விதி மற்றும் 1950ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 23(4), 23(5) மற்றும் 23(6) பிரிவுகளின்படி இந்த இணைப்பு நடைமுறைப்படுத்தப்படும்.
முன்னதாக, பான் அட்டையை ஆதாருடன் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. தேர்தல் ஆணையத்தின் தலைவரான ஜ்ஞானேஷ் குமார் தலைமையில், மத்திய உள்துறை செயலாளர், சட்டத்துறை செயலாளர், MeitY, UIDAI மற்றும் ECI-யின் தொழில்நுட்ப வல்லுநர்கள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
இந்த முடிவின் முக்கிய நோக்கம் வாக்காளர் பட்டியலில் உள்ள போலி வாக்காளர்களை கண்டறிந்து தேர்தல் முறையை மேலும் சீர்படுத்துவதாகும். மேலும், ஒரே நபர் பல இடங்களில் வாக்களிக்கும் நிகழ்வுகளை தடுப்பது என்பதும் முக்கிய நோக்கமாக உள்ளது. தேர்தல் ஆணையம் கூறியதாவது, இந்த நடவடிக்கையின் மூலம் தேர்தல் முறையில் அதிக வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மை ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.