வங்காளதேச ரூபாய் நோட்டுகளில் இருந்து ஷேக் முஜிபுர் ரஹ்மானின் படம் நீக்கம்

டாக்கா: வங்காளதேச ரூபாய் நோட்டுகளில் இருந்து ‘தேசத்தின் தந்தை’ ஷேக் முஜிபுர் ரஹ்மானின் படம் நீக்கப்பட்டுள்ளது. புதிதாக வடிவமைக்கப்பட்ட நோட்டுகளில் ஷேக் முஜிபுர் ரஹ்மானின் படம் இடம்பெறவில்லை. அறிக்கையின்படி, வங்காளதேசம் இந்த புதிய ரூபாய் நோட்டுகளை வெளியிடத் தொடங்கியுள்ளது.
பழைய வங்காளதேச டாக்கா நோட்டுகளை படிப்படியாக ரத்து செய்வதன் மூலம், வங்காளதேச வங்கி ஷேக் முஜிபுர் ரஹ்மானின் படத்தை ரூபாய் நோட்டுகளில் இருந்து நீக்கும் பணியைத் தொடங்கியது.
இந்த புதிய தொடர் நோட்டுகளில் ஷேக் முஜிபுர் ரஹ்மானின் படம் முதன்முறையாக இடம்பெறவில்லை. அதற்குப் பதிலாக, வங்காளதேசத்தின் கலாச்சார பாரம்பரியத்தை எடுத்துக்காட்டும் இயற்கை காட்சிகள், வரலாற்று நினைவுச்சின்னங்கள் போன்றவை புதிய ரூபாய் நோட்டுகளில் சேர்க்கப்பட்டுள்ளன. கோவில்கள் மற்றும் புத்த வழிபாட்டு தலங்களின் படங்களும் புதிய நாணய நோட்டுகளில் உள்ளன.
ஷேக் முஜிபுர் ரஹ்மானின் மகள் மற்றும் பதவியிறக்கப்பட்ட முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக வங்காளதேச சர்வதேச தீர்ப்பாயத்தின் வழக்கறிஞர்கள் மனிதகுலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளைக் கொண்டு வந்ததைத் தொடர்ந்து இந்த புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2024 மாணவர் போராட்டத்தின் போது இனப்படுகலைக்கு உத்தரவிட்டதில் ஹசீனாவின் பங்கைக் குறிப்பிட்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மக்கள் போராட்டத்தின் விளைவாக 2024 ஆகஸ்ட் 5 அன்று ஷேக் ஹசீனா பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து முகமது யூனுஸ் தலைமையில் ஒரு இடைக்கால அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது, மேலும் புதிய கல்வி ஆண்டின் பாடப்புத்தகங்களில் இருந்து ‘தேசத்தின் தந்தை’ என்று இதுவரை கருதப்பட்ட ஷேக் முஜிபுர் ரஹ்மானின் பெயரை நீக்கியது. புதிய புத்தகங்களில், மேஜர் ஜியாவுர் ரஹ்மான் சுதந்திரத்தை அறிவித்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.