லண்டன் மற்றும் சிங்கப்பூர் பாணியில் கண்டக்டர் இல்லாத சொகுசு பேருந்து சேவை சென்னையில் அறிமுகம்

சென்னையின் போக்குவரத்து வரலாற்றில் புதிய மாற்றமாக கண்டக்டர் இல்லாத அதிநவீன மின்சார சொகுசு பேருந்து சேவையை தமிழக போக்குவரத்துத் துறை தொடங்கியுள்ளது. சென்னை ஒன் ஆப் மூலம் மட்டுமே டிக்கெட் எடுக்கும் வசதி கொண்ட இந்த ‘தங்கரதம்’, முதற்கட்டமாக ஓஎம்ஆர் தகவல் தொழில்நுட்பப் பாதையில் இயக்கப்படுகிறது. ஐடி ஊழியர்களை கவரும் வகையில் இதில் ஏசி, இலவச வைஃபை மற்றும் சிசிடிவி போன்ற சர்வதேச தரத்திலான வசதிகள் உள்ளன.
கோயம்பேடு முதல் சிறுசேரி வரையிலான வழித்தடங்களில் இயக்கப்படும் இப்பேருந்துகளில் பயண தூரத்திற்கு ஏற்ப 50 முதல் 150 ரூபாய் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதியவர்கள் எளிதாக ஏறும் வகையில் தாழ்தள வசதியுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மின்சார பேருந்துகள், நகரின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நெரிசலை குறைக்க பெரும் வரப்பிரசாதமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.