ரூ. 50 லட்சம் வரை கடன் – 50% மானியம் – தமிழ்நாடு அரசு அறிவிப்பு

ரூ. 50 லட்சம் வரை கடன் – 50% மானியம் – தமிழ்நாடு அரசு அறிவிப்பு

தமிழ்நாடு அரசு தொழில்முனைவோருக்காக புதிய கால்நடை வளர்ப்பு திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் புதிய கால்நடை பண்ணைகளை அமைப்பதற்காக ரூ. 50 லட்சம் வரை கடன் பெற முடியும். இந்த கடனில் 50% வரை மானியம் வழங்கப்படுவதுடன், வட்டி விகிதம் 3% மட்டுமே என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

யார் விண்ணப்பிக்கலாம்?

தனி நபர்கள், சுய உதவிக் குழுக்கள் (SHG), விவசாய உற்பத்தியாளர்கள் அமைப்புகள் (FPO), விவசாய கூட்டுறவுகள், மற்றும் கூட்டுப் பொறுப்பு சங்கங்கள் (ULG) ஆகியோர் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். கால்நடை வளர்ப்புத் துறையில் ஈடுபட விரும்புவோர் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி வருமானத்தைக் கூட்டலாம்.

கடனுக்கான விவரங்கள்

  • கோழிப்பண்ணை மற்றும் குஞ்சு பொரிப்பகம் – ரூ. 25 லட்சம் வரை
  • செம்மறியாடு/வெள்ளாடு பண்ணை – ரூ. 10 லட்சம் முதல் ரூ. 50 லட்சம் வரை
  • பன்றி வளர்ப்புப் பண்ணை – ரூ. 15 லட்சம் முதல் ரூ. 30 லட்சம் வரை

விண்ணப்பிக்கும் முறை

விருப்பமுள்ளோர் https://nim.vdyamimitra.in/ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவல்களுக்கு https://www.tnida.tn.gov.in/ மற்றும் https://www.tnlda.tn.gov.in/ ஆகிய இணையதளங்களை பார்வையிடலாம்.

தேவையான ஆவணங்கள்

  • முகவரி சான்று
  • 3 ஆண்டுகளுக்கான வருமான வரி அறிக்கைகள்
  • கடந்த 6 மாதங்களுக்கான வங்கி அறிக்கை
  • பான்/ஆதார் அட்டை
  • பயிற்சி மற்றும் அனுபவச் சான்றுகள்

இந்த வாய்ப்பினை தொழில்முனைவோர் பயன்படுத்தி வளர்ச்சி அடையலாம். மேலும் விவரங்களுக்கு அருகிலுள்ள கால்நடை உதவி மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *