யுபிஐ வசதி இல்லாமலேயே இத்தனை காலம் சமாளித்த சென்னைப் பெண்ணின் சுவாரசியக் கதை

தொழில்நுட்ப யுகத்திலும் 2025 செப்டம்பர் வரை யுபிஐ பயன்படுத்தாமல் ரொக்கப் பணத்தை மட்டுமே நம்பி வாழ்ந்துள்ளார் 31 வயதான ரித்திகா. ஆட்டோ கட்டணம் செலுத்தத் தாயார் மாடியிலிருந்து பணத்தை வீசுவது மற்றும் நண்பர்களுடன் உணவகம் செல்லும்போது உறவினர்களின் உதவியை நாடுவது எனப் பல சிரமங்களை அவர் சந்தித்துள்ளார். டிஜிட்டல் இந்தியா காலத்தில் ஒரு மனிதவள அதிகாரி இவ்வளவு காலம் பழைய பாணியைப் பின்பற்றியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
தற்போது யுபிஐ பயன்பாட்டிற்கு மாறியுள்ள ரித்திகா, இதனால் பணப் பரிவர்த்தனை எளிதாகிவிட்டாலும் செலவுகள் அதிகரித்துள்ளதாகக் கூறுகிறார். இதைக் கட்டுப்படுத்த வார இறுதி நாட்களில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைக்கு அவர் விடுமுறை அளித்துள்ளார். நவீன மாற்றத்திற்கு உள்ளான தனது இந்த விசித்திரமான அனுபவத்தை அவர் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.