முக்கியமான அரையிறுதியில் சொதப்பிய வைபவ் சூர்யவன்ஷி அதிர்ச்சியில் ரசிகர்கள்

முக்கியமான அரையிறுதியில் சொதப்பிய வைபவ் சூர்யவன்ஷி அதிர்ச்சியில் ரசிகர்கள்

இலங்கைக்கு எதிரான யு-19 ஆசியக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி ஏமாற்றமளித்தார். வெறும் 9 ரன்களில் ஆட்டமிழந்த அவர், பெரிய அணிகளுக்கு எதிராக மீண்டும் ஒருமுறை திணறினார். இந்த தொடரில் சிறிய அணிகளுக்கு எதிராக அதிரடி காட்டினாலும், பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கு எதிரான முக்கியமான போட்டிகளில் அவர் சோபிக்கத் தவறியது இந்திய அணிக்கு பின்னடைவாக அமைந்தது.

மழையினால் 20 ஓவர்களாகக் குறைக்கப்பட்ட இப்போட்டியில் இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்து 138 ரன்கள் எடுத்தது. இலங்கை தரப்பில் சாமிகா அதிகபட்சமாக 42 ரன்கள் எடுத்தார். இந்திய பந்துவீச்சாளர்கள் ஹெனில் படேல் மற்றும் கனிஷ்க் சௌஹான் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர். இறுதிப்போட்டிக்கு முன்னேற இந்திய பேட்ஸ்மேன்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *