மறைந்த ரசிகர்களுக்கு மரியாதை செலுத்த ஐபிஎல் தொடக்க விழா ரத்து செய்து பிசிசிஐ நெகிழ்ச்சி முடிவு

மறைந்த ரசிகர்களுக்கு மரியாதை செலுத்த ஐபிஎல் தொடக்க விழா ரத்து செய்து பிசிசிஐ நெகிழ்ச்சி முடிவு

கடந்த ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வெற்றி கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 11 ரசிகர்களின் நினைவாக ஐபிஎல் 2026 தொடக்க விழாவை ரத்து செய்ய பிசிசிஐ முடிவு செய்துள்ளது. இந்த மனிதாபிமான நடவடிக்கை மூலம் உயிரிழந்தவர்களுக்கு வாரியம் தனது அஞ்சலியை செலுத்துகிறது. இன்று சனிக்கிழமை பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடப்பு சாம்பியன் ஆர்சிபி மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டியுடன் தொடர் தொடங்குகிறது.

தொடக்க விழா நடைபெறாது என்றாலும் மே 31 அன்று நடைபெறும் இறுதிப் போட்டிக்கு முன்னதாக பிரம்மாண்டமான நிறைவு விழா நடத்தப்படும் என்று பிசிসিஐ செயலாளர் தேவஜித் சய்கியா தெரிவித்துள்ளார். இந்த சீசனில் இஷான் கிஷன் தலைமையிலான ஹைதராபாத் அணியும் ஆர்சிபியும் மோதும் முதல் போட்டியைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *