மருந்தாக நினைத்து உட்கொள்ளும் கேஸ் மாத்திரைகள் உயிருக்கே ஆபத்தாக முடியலாம்

மருந்தாக நினைத்து உட்கொள்ளும் கேஸ் மாத்திரைகள் உயிருக்கே ஆபத்தாக முடியலாம்

தினமும் வெறும் வயிற்றில் கேஸ் மாத்திரைகளை உட்கொள்ளும் பழக்கம் இன்று பலரிடம் காணப்படுகிறது. ஆனால் மருத்துவர்களின் எச்சரிக்கைப்படி, ஓமிபிரசோல் போன்ற அமிலத்தன்மை எதிர்ப்பு மருந்துகளைத் தொடர்ந்து எடுத்துக்கொள்வது இதயம் மற்றும் சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்தும். மேலும், உடலில் சத்துக்கள் உறிஞ்சப்படுவதைத் தடுத்து எலும்புகளின் அடர்த்தியைக் குறைத்து ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற கடுமையான நோய்களுக்கு வழிவகுக்கிறது.

வயிற்றில் சுரக்கும் இயற்கையான அமிலம் செரிமானத்திற்கு அவசியமானது என்றாலும், மாத்திரைகளால் அந்த அளவு குறையும்போது குடல் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. மருத்துவரின் ஆலோசனையின்றி பல ஆண்டுகளாக இம்மாத்திரைகளைத் தொடர்ந்து பயன்படுத்துவது உட்புற உறுப்புகளைப் பாதிக்கும். எனவே, மருந்துகளைச் சார்ந்திருப்பதைத் தவிர்த்து ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதே வருங்கால உடல்நலப் பாதிப்புகளைத் தவிர்க்க உதவும் சிறந்த வழியாகும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *