மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒருமுறை வாய்ப்பு! பென்ஷன் திட்டத்தை தேர்வு செய்ய காலக்கெடு

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் தேசிய பென்ஷன் திட்டம் (NPS) சந்தாதாரர்களுக்கு நிதி அமைச்சகம் ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. யுனிஃபைட் பென்ஷன் திட்டத்தை (UPS) தேர்ந்தெடுப்பதற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி நவம்பர் 30, 2025 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த தேதிக்குப் பிறகு வேறு எந்த விண்ணப்பங்களும் ஏற்கப்படாது. சந்தை அபாயம் இல்லாத இந்த புதிய மாற்று பென்ஷன் திட்டம் ஏப்ரல் 1, 2025 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. ஊழியர்களுக்கும், அரசாங்கத்துக்கும் இடையே நீண்ட காலமாக நிலவி வந்த பென்ஷன் திட்டம் தொடர்பான குழப்பத்தை நீக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த UPS திட்டத்தின் கீழ், குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் சேவை செய்த ஊழியர்கள், தங்கள் கடைசி 12 மாத சராசரி அடிப்படைச் சம்பளத்தில் 50% பென்ஷனாகப் பெறுவார்கள். மேலும், ஊழியர்களின் வாழ்க்கைத் துணைக்கும் பென்ஷன் மற்றும் பணிக்கொடைக்கான வசதிகள் இந்தத் திட்டத்தில் உள்ளன. விருப்பமுள்ள ஊழியர்கள் சென்ட்ரல் ரெக்கார்ட்கீப்பிங் ஏஜென்சி (CRA) மூலம் ஆன்லைனிலோ அல்லது சம்பந்தப்பட்ட நோடல் அலுவலகங்களில் படிவத்தைச் சமர்ப்பித்தோ இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். உரிய காலக்கெடுவுக்குள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க ஊழியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.