மதுராந்தகம் அருகே சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியில் உறைந்த மக்கள்
March 11, 2026

மதுராந்தகம் அருகே விபத்தில் சிக்கிய 14 வயது சிறுமியை இரண்டு மர்ம நபர்கள் கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உடன் வந்த நண்பர் அச்சத்தில் அங்கிருந்து தப்பிச் சென்ற நிலையில், காயமடைந்த சிறுமியை ஏரிப் பகுதிக்கு தூக்கிச் சென்று இந்த கொடூரத்தை அரங்கேற்றியுள்ளனர்.
தற்போது பாதிக்கப்பட்ட சிறுமி செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக மேல்மருவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஒருவரை கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள மற்றொரு நபரை தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.