பொள்ளாச்சி மாவட்டமாக கோரிக்கை தீவிரம்

பொள்ளாச்சி மாவட்டமாக கோரிக்கை தீவிரம்

கோவை மாவட்டத்தில், பொள்ளாச்சி 2வது பெரிய நகரமாக உள்ளது. கடந்த அதிமுக ஆட்சியின் போது, பொள்ளாச்சியை தனி மாவட்டமாக மாற்றுவது குறித்து பூர்வாங்கப் பணிகள் தொடங்கப்பட்டு அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

இந்த நிலையில், பொள்ளாச்சியை மாவட்டமாக மாற்ற வலியுறுத்தி அரசு ஊழியர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றி வருகின்றனர். இதோடு, பொதுமக்களும் சமூக வலைதளங்களில் ‘ஸ்டேட்டஸ்’ மூலம் தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இந்த சமூக ஊடக நடவடிக்கை, பொள்ளாச்சி மாவட்டமாக்கம் தொடர்பான விவாதத்தை மீண்டும் தீவிரமாக்கியுள்ளது. அரசின் உரிய நடவடிக்கைக்காக பொள்ளாச்சி மக்களின் காத்திருக்கிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *