பூமியை நெருங்கும் பெரும் சிறுகோள்: அபாயம் இல்லை என நாசா தகவல்

பூமியை நெருங்கும் பெரும் சிறுகோள்: அபாயம் இல்லை என நாசா தகவல்

தாஜ்மஹால் அளவிற்கு பெரியதாக இருக்கும் ஒரு சிறுகோள் பூமியின் அருகே விரைவாக நகர்ந்து வருவதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் (நாசா) எச்சரித்துள்ளது. இந்த சிறுகோள் சுமார் 540 அடி பரப்பளவைக் கொண்டதாக இருக்கிறது.

அந்த சிறுகோள் பூமியிலிருந்து 5 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. இது மணிக்கு 77,282 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாகவும், மார்ச் 26 ஆம் தேதி மாலை 5:04 மணியளவில் பூமியைக் கடந்து செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சிறுகோள் மிகுந்த வேகத்தில் நகர்ந்தாலும், அது பூமிக்கு உடனடி ஆபத்தை ஏற்படுத்தாது என நாசா உறுதியளித்துள்ளது. ஆய்வாளர்கள் தொடர்ந்து இதன் பாதையை கண்காணித்து வருகின்றனர். பொதுமக்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *