பிரிட்டிஷ் ஆதிக்கத்திற்கு பிறகும் 450 ஆண்டுகள் அடிமைப்பட்டுக் கிடந்த கோவா இந்தியாவின் வசமானது எப்படி
March 10, 2026

இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகும் கோவா சுமார் 450 ஆண்டுகள் போர்ச்சுகீசியர்களின் பிடியில் இருந்தது. அமைதி பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த நிலையில், போர்ச்சுகீசிய அரசு கோவாவை ஒப்படைக்க மறுத்தது. இதனால் இந்திய அரசு இராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள முடிவெடுத்தது.
1961 ஆம் ஆண்டு ஆபரேஷன் விஜய் என்ற பெயரில் முப்படைகளும் இணைந்து நடத்திய 36 மணி நேர அதிரடிப் போரில் போர்ச்சுகீசியப் படைகள் சரணடைந்தன. இதன் விளைவாக டிசம்பர் 19, 1961 அன்று கோவா அதிகாரப்பூர்வமாக இந்தியாவுடன் இணைந்தது. இந்த வெற்றி கோவா மக்களின் நீண்ட கால சுதந்திரக் கனவை நனவாக்கியது.