பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கும் நாட்டின் மிகப்பெரிய நொய்டா சர்வதேச விமான நிலையத்தின் பிரமிப்பூட்டும் சிறப்பம்சங்கள்

பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கும் நாட்டின் மிகப்பெரிய நொய்டா சர்வதேச விமான நிலையத்தின் பிரமிப்பூட்டும் சிறப்பம்சங்கள்

பிரதமர் நரேந்திர மோடி இன்று நொய்டா சர்வதேச விமான நிலையத்தைத் திறந்து வைக்கிறார். இது டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தின் நெரிசலைக் குறைப்பதோடு இந்தியாவின் லாஜிஸ்டிக்ஸ் துறைக்கு புதிய வேகத்தை அளிக்கும். இரண்டு கட்டங்களாக உருவாக்கப்படும் இந்த பசுமைத் திட்டம், ஆண்டுக்கு 225 மில்லியன் பயணிகளைக் கையாளும் திறன் கொண்டதாக அமையும். இது நாட்டின் மிக முக்கியமான சுற்றுச்சூழல் பாதுகாப்புத் திட்டங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

இந்த விமான நிலையத்தில் பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் (MRO) வசதி மற்றும் பிரம்மாண்டமான சரக்கு முனையம் அமையவுள்ளது. இதனைச் சுற்றிலும் செமிகண்டக்டர் ஆலை மற்றும் திரைப்பட நகரம் உள்ளிட்ட பல்வேறு தொழில் பூங்காக்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. சுமார் 30,000 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்த்துள்ள இந்தத் திட்டம், வட இந்தியாவின் தொழில் வளர்ச்சியில் ஒரு முக்கிய மைல்கல்லாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *