பாரிஸ் மேயர் தேர்தலின் வெற்றி வாய்ப்பை தீர்மானிக்கும் ஒரு லட்சம் வளர்ப்பு நாய்கள்
March 18, 2026

பிரான்ஸ் தலைநகர் பாரிஸின் மேயர் தேர்தலில் வெற்றி பெற ஒரு லட்சம் வளர்ப்பு நாய்களுக்கான அடிப்படை வசதிகள் முக்கிய அரசியல் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இதற்காக சோஷியலிஸ்ட் கட்சி முதல் கன்சர்வேடிவ் கட்சி வரை அனைத்து வேட்பாளர்களும் நாய் உரிமையாளர்களின் வாக்குகளை கவர பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வருகின்றனர்.
அதிபர் மேக்ரானின் ஆதரவு பெற்ற ரச்சிடா டாட்டி நாய்களுக்காக புதிய பூங்காக்களை அமைப்பதாக உறுதியளித்துள்ளார். முதற்கட்ட வாக்கெடுப்பில் முன்னிலை வகிக்கும் இம்மானுவேல் கிரெகோயர் நாய்கள் சுதந்திரமாக நடமாட திறந்தவெளி இடங்களை உருவாக்குவதே தமது முக்கிய நோக்கம் என தெரிவித்துள்ளார்.