பாஜகவில் சேருவாரா? காங்கிரசுக்கு புதிய அதிர்ச்சி?

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் திருவனந்தபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஷஷி தரூர், கட்சியை விட்டு வெளியேற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த நாட்களில் ராகுல் காந்தி, காங்கிரசின் உட்பகுதியில் உள்ள பாஜக ஆதரவாளர்களை அடையாளம் காண வேண்டும் என பேசியிருந்த நிலையில், தரூர் பாஜகவில் சேரும் வாய்ப்புகள் குறித்து பேசப்படுகிறது.
ஷஷி தரூர் கடந்த 2022-ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார். ஆனால் மல்லிகார்ஜுன் கர்கேவிடம் அவர் தோல்வியடைந்தார். இதன் பிறகு தரூர் மற்றும் காங்கிரஸ் தலைமையின் இடையே கருத்து முரண்பாடு அதிகரித்துள்ளது. தரூர் கேரளாவில் கட்சியின் செயல்பாட்டில் புறக்கணிக்கப்படுவதாகவும், மாநில அரசியலில் முக்கியமான பங்காற்றத் தன்னை முன்மொழிந்தும் பார்வையில் இல்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த நாட்களில் அவர் பாஜகவின் முக்கியத் தலைவர் ஜெய் பாண்டாவுடன் எடுத்த புகைப்படம் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.
தரூரின் தனிப்பட்ட விருப்பமும் இவரது எதிர்கால முடிவில் முக்கிய பங்காற்றக்கூடும். இவர் நாடாளுமன்ற உறுப்பினர் மட்டுமல்லாமல் தேசிய அல்லது மாநில அளவிலான முக்கியப் பொறுப்பை ஏற்க விரும்புகிறார். தரூர் பாஜகவில் சேருவாரா அல்லது வேறு கட்சியில் இணைவாரா என்பது இன்னும் தெரியவில்லை. ஆனால் அவர் வெளியேறுவதை காங்கிரஸ் தவிர்க்க முயற்சிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.