பாஜகவின் மதஅரசியல் முயற்சிக்கு மக்கள் மறுப்பு: அமைச்சர் சேகர்பாபு
March 19, 2025

அமைச்சர் சேகர்பாபு, மதத்தை பயன்படுத்தி அரசியல் செய்யும் பாஜகவின் முயற்சிகளை கடுமையாக விமர்சித்துள்ளார். திருச்செந்தூர் மற்றும் ராமேஸ்வரம் கோயில்களில் இரண்டு பக்தர்கள் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்ததாக அவர் கூறினார். இதை தவறாகப் பயன்படுத்து அண்ணாமலை உள்ளிட்டோர் அரசியல் செய்ய முயல்வதாக அவர் குற்றம்சாட்டினார்.
இச்சம்பவங்களை கூட்ட நெரிசலால் ஏற்பட்டதாக கூறி, இந்து சமய அறநிலையத்துறை மீது பாஜகவினர் தவறான தகவல்களை பரப்பி களங்கம் விளைவிக்க முயல்வதாக சேகர்பாபு கண்டனம் தெரிவித்தார். மதத்தை முன்னிறுத்தி அரசியல் செய்ய நினைப்பவர்களுக்கு மக்கள் தக்க பதிலடி கொடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.