படுக்கை அறை விவகாரத்தில் விபரீதம் விரக்தியில் கணவன் எடுத்த அதிர்ச்சி முடிவு
February 9, 2026

உத்தரப் பிரதேசத்தில் 18 ஆண்டு கால திருமண வாழ்க்கையில் கடந்த 8 ஆண்டுகளாக மனைவி உடலுறவுக்கு மறுத்ததால், விரக்தியடைந்த 37 வயது கணவன் தனது உறுப்பைத் தானே அறுத்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போதையில் வீட்டிற்கு வந்தபோது ஏற்பட்ட தகராறில் இந்த விபரீதம் நிகழ்ந்தது.
இரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை மீட்ட உறவினர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். பல மணிநேர அறுவை சிகிச்சைக்குப் பின் மருத்துவர்கள் அந்த உறுப்பை மீண்டும் வெற்றிகரமாகப் பொருத்தினர். தற்போது அவர் அபாய கட்டத்தைத் தாண்டியுள்ள நிலையில், மதுப்பழக்கமே இந்த மோதலுக்குக் காரணம் என மனைவி தரப்பில் கூறப்படுகிறது.