நெதன்யாகு மரணம் குறித்த மர்மம் மற்றும் ஏஐ வீடியோ சர்ச்சையால் உலகளவில் கிளம்பும் சந்தேகம்

ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கொல்லப்பட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வைரலாகி வருகின்றன. அவர் காயங்களுடன் மீட்கப்படுவது போன்ற புகைப்படங்கள் வெளியானதால் இந்த விவாதம் தீவிரமடைந்தது. இருப்பினும் இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் இந்தத் தகவலை முற்றிலுமாக மறுத்துள்ளதுடன் நெதன்யாகு பாதுகாப்பாகவும் உடல் நலத்துடனும் இருப்பதாக அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
மறுபுறம் நெதன்யாகு உரையாற்றுவது போல் வெளியான வீடியோவில் அவரது கையில் ஆறு விரல்கள் இருப்பது போன்ற தொழில்நுட்பக் குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன. இது ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட போலியான வீடியோ என்று நெட்டிசன்கள் சந்தேகம் எழுப்புகின்றனர். இதற்கிடையே நெதன்யாகு உயிருடன் இருந்தால் அவரைத் தேடிக் கொல்லப்போவதாக ஈரான் பகிரங்கமாகச் சபதம் ஏற்றிருப்பது போர்ப் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.