நிதிஷ் குமாருக்கு மனநிலை சரியில்லை – PK

பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தேசிய கீதத்தை அவமதித்ததாக எழுந்துள்ள சர்ச்சை மீதான விமர்சனங்கள் தொடர்ந்து மிகுந்து வருகின்றன. இந்த விவகாரத்தில் அரசியல் ஆலோசகரும் ஜனதா தளம் (யுனைடெட்) முன்னாள் உறுப்பினருமான பிரசாந்த் கிஷோர் (PK) கடுமையாக கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “நிதிஷ் குமாரின் மனநிலை சரியில்லை, அதனால்தான் அவர் அரசியல் நடவடிக்கைகளில் சரியான தீர்வுகளை எடுக்க முடியவில்லை” என்றார்.
மேலும், “அவருக்கு தனது அமைச்சரவையில் உள்ளவர்களின் பெயர்களே நினைவில் இல்லை. இதுவே அவரது நிர்வாக திறனை வெளிப்படுத்துகிறது. இவர் தொடர்ந்து பதவியில் இருக்க முடியாது, உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்” என PK வலியுறுத்தினார். பிரதமர் மோடிக்கும் இந்த உண்மை தெரிந்திருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார். இந்த சம்பவம் பீகார் அரசியலில் புதிய பரபரப்பை உருவாக்கியுள்ளது.