நடிகை ஸ்ரீதேவியின் சென்னை சொத்துக்களை அபகரிக்க முயற்சிப்பதாக கூறி போனி கபூர் மற்றும் அவரது மகள்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு

நடிகை ஸ்ரீதேவியின் சென்னை சொத்துக்களை அபகரிக்க முயற்சிப்பதாக கூறி போனி கபூர் மற்றும் அவரது மகள்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு

மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு சொந்தமான சென்னை ஈசிஆர் பகுதியில் உள்ள 4.77 ஏக்கர் நிலத்தை ஒரு கும்பல் அபகரிக்க முயற்சிப்பதாக போனி கபூர், ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். 1988-ல் வாங்கப்பட்ட இந்த நிலத்திற்கு உரிமை கோரி ஒரு பெண்ணும் அவரது குழந்தைகளும் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்த வழக்கை தள்ளுபடி செய்யக் கோரிய மனுவை மாவட்ட நீதிமன்றம் நிராகரித்ததால், கபூர் குடும்பத்தினர் தற்போது உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். முறையான ஆவணங்கள் தங்களுக்கு ஆதரவாக இருப்பதாகக் கூறும் போனி கபூர் தரப்பு, தவறான உரிமை கோரல்களை எதிர்த்து சட்டப் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *