தேர்தல் களத்தில் பெண்களின் சக்தியை அறுவடை செய்ய நடிகர் விஜய் அதிரடி திட்டம்

தமிழக சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் புதிய அரசியல் வியூகத்தை வகுத்துள்ளார். மாநிலத்தின் 234 தொகுதிகளிலும் தலா 1,000 பெண்கள் வீதம் மொத்தம் 2.34 லட்சம் பேர் கொண்ட பிரம்மாண்ட ‘பெண்கள் படை’ உருவாக்கப்பட உள்ளது. இந்த குழுவினர் வீடு வீடாகச் சென்று கட்சியின் கொள்கைகளையும் விஜய்யின் அரசியல் நோக்கங்களையும் மக்களிடம் நேரடியாகக் கொண்டு சேர்ப்பார்கள்.
தமிழகத்தில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர் காலத்திற்குப் பிறகு பெண்களின் ஆதரவை முழுமையாகப் பெற விஜய் முன்னெடுக்கும் இந்த திட்டம் அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண்களின் பாதுகாப்பு மற்றும் சமூக முன்னேற்றத்தை மையமாகக் கொண்டு செயல்படும் இந்தப் படை, தேர்தல் பிரச்சார முறையில் புதிய மாற்றத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.