தேசிய கீதத்தில் அதிரடி மாற்றம்! ‘வந்தே மாதரம்’ பாடலுக்கு புதிய விதிமுறைகள்

மத்திய உள்துறை அமைச்சகம் தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ தொடர்பாக புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இனிவரும் காலங்களில், அனைத்து அரசு நிகழ்ச்சிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் தேசிய கீதத்திற்கு (ஜன கண மன) முன்பாக கட்டாயமாக ‘வந்தே மாதரம்’ இசைக்கப்பட வேண்டும். குறிப்பாக, குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர் முன்னிலையில் நடைபெறும் அரசு விருது வழங்கும் விழாக்கள் அல்லது உரைகளின் போது இந்த விதிமுறை அமலுக்கு வரும். இந்தப் பாடல் இசைக்கப்படும் போது அங்கிருக்கும் அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பங்கிம் சந்திர சட்டோபாத்யாயின் காலத்தால் அழியாத இந்தப் படைப்பின் 150-வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் இந்தச் சிறப்பு முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. புதிய வழிகாட்டுதலின்படி, ஆறு சரணங்களைக் கொண்ட முழுப் பாடலும் பல்வேறு அரசு விழாக்களில் பாடப்படும். இருப்பினும், திரையரங்குகள் அல்லது ஆவணப்படக் காட்சிகளின் போது தேசியப் பாடல் இசைக்கப்பட்டால், தேவையற்ற குழப்பங்களைத் தவிர்க்க பார்வையாளர்கள் எழுந்து நிற்க வேண்டிய அவசியமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் இந்த புதிய விதிமுறைகளை உடனடியாகப் பின்பற்றுமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.