தென் மண்டலத்தை வளைக்க திமுக மாஸ்டர் பிளான் இன்று முதல் ஓபிஎஸ் அதிரடி பிரச்சாரம்
March 13, 2026

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி தென் மாவட்டங்களில் திமுகவின் வெற்றியை உறுதி செய்ய முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இன்று முதல் தனது சூறாவளி பிரச்சாரத்தைத் தொடங்குகிறார். இன்று காலை 9 மணிக்கு தென்காசி தொகுதியில் தொடங்கும் அவர், மாலை கடையநல்லூரிலும், இரவு சங்கரன்கோவிலிலும் பொதுமக்களைச் சந்தித்து வாக்கு சேகரிக்கிறார்.
நாளை மார்ச் 14-ம் தேதி வாசுதேவநல்லூர், முதுகுளத்தூர் மற்றும் பரமக்குடி ஆகிய தொகுதிகளில் ஓபிஎஸ் தீவிர பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். திமுக கூட்டணியில் இணைந்த பிறகு தென் மண்டல அரசியலில் ஓபிஎஸ் மேற்கொள்ளும் இந்த முதல் கட்டப் பிரச்சாரம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.