தூத்துக்குடியில் மூன்றரை மணி நேரத்தில் கனமழை – பல இடங்களில் வெள்ளம்

தூத்துக்குடியில் மூன்றரை மணி நேரத்தில் கனமழை – பல இடங்களில் வெள்ளம்

தூத்துக்குடி மாவட்டத்தில் கடுமையான வெயில் காரணமாக பொதுமக்கள் பல நாட்களாக அவதிப்பட்டு வந்தனர். வெப்பத்தால் மக்கள் சிரமப்படும் சூழலில், இன்று அதிகாலை திடீரென கனமழை பெய்தது. அதிகாலை 2 மணிக்கு தொடங்கி 5.30 மணி வரை தொடர்ச்சியாக மூன்றரை மணிநேரம் இடி-மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.

இந்த மழையால் மொத்தம் 7 செ.மீ மழை பதிவாகியுள்ளது. தூத்துக்குடி நகரின் பிரையண்ட் நகர், முத்தம்மாள் புரம், சண்முகபுரம், திரேஸ்புரம் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பழைய மாநகராட்சி அலுவலகத்தின் முன்பும் வெள்ளம் சூழ்ந்ததால், ரமலான் நோன்பு திறக்க பள்ளிவாசலுக்கு சென்ற சில இஸ்லாமியர்கள் சிரமங்களை சந்தித்தனர். திடீர் கனமழை பொதுமக்கள் வாழ்க்கையில் அவசர சூழ்நிலையை உருவாக்கியது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *