திறமையாக மின் பயன்பாடு: வீணாக செலவாகும் ரூ.1000 வரை கட்டணம் குறைக்கலாம்
March 22, 2025

வீடுகளில் சில சாதாரண பழக்கங்கள் காரணமாக மின் கட்டணத்தில் தேவையில்லாத உயர்வு ஏற்படுகிறது. குறிப்பாக, சில சாதனங்களை முறையாக முடக்காமல் விடுவது 10% வரை மின் விரயத்திற்குக் காரணமாகிறது.
உதாரணமாக, டிவி மற்றும் Set-top box-ஐ பயன்பாட்டிற்கு பிறகு முறையாக ஸ்விட்ச் ஆஃப் செய்யாமல் விடுவது, ஏசி (AC) பயன்படுத்திய பிறகு ரிமோட்டில் மட்டுமே ஆஃப் செய்து ஸ்டெபிலைஸரை (Stabilizer) செயல்பாட்டில் விட்டுவிடுவது போன்ற பழக்கங்கள் அதிக மின் செலவுக்கு வழிவகுக்கும். அதேபோல், பயன்பாடு இல்லாமல் போன் சார்ஜர் போன்ற சாதனங்களை ஸ்விட்சில் பொருத்தி விடுவதும் மின்சார வீச்சை அதிகரிக்கும்.
இந்த விதமான செயல்பாடுகள் ஆண்டுக்கு ஒரு வீடிற்கு ரூ.1000 வரை கூடுதலாக மின் கட்டணமாக செலவாகலாம். எனவே, சாதனங்களை முழுமையாக ஆஃப் செய்யும் பழக்கத்தைப் பெறுவது, மின் கட்டணத்தைக் குறைக்க உதவும்.