திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் ரூ. 12.46 கோடி மதிப்பில் அதிநவீன சிகிச்சை வசதிகளை அமைச்சர் தொடங்கி வைத்தார்

திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் ரூ. 12.46 கோடி மதிப்பில் அதிநவீன சிகிச்சை வசதிகளை அமைச்சர் தொடங்கி வைத்தார்

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ. 12.46 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள அதிநவீன கேத் லேப் மற்றும் உயர்தொழில்நுட்ப சிடி ஸ்கேன் கருவிகளை மக்கள் பயன்பாட்டிற்காக அமைச்சர் மா. சுப்பிரமணியன் திறந்து வைத்தார். இதன் மூலம் இதய சிகிச்சை மற்றும் ஸ்கேன் பரிசோதனைகளுக்காக சென்னை செல்ல வேண்டிய அவசியமின்றி, திருவள்ளூர் மற்றும் சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான கிராம மக்கள் இனி உள்ளூரிலேயே 24 மணி நேரமும் தடையற்ற மருத்துவச் சேவையைப் பெற முடியும்.

தமிழக முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி கடந்த ஐந்தாண்டுகளில் எட்டு இடங்களில் புதிய கேத் லேப் ஆய்வகங்கள் உருவாக்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பெருமிதத்துடன் தெரிவித்தார். மேலும், கடலூர் மற்றும் நீலகிரி உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் இதற்கான பணிகள் விரைந்து நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். பொதுமக்கள் இந்த உயரிய மருத்துவ வசதிகளை நல்முறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறு அவர் அன்போடு கேட்டுக்கொண்டார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *