தஞ்சாவூர் செல்லும் வழியில் சாலைகள் சேதம் – பொதுமக்கள் கோரிக்கை
விக்கிரவாண்டி – கும்பகோணம் – தஞ்சாவூர் (வி.கே.டி.) நான்கு வழிச்சாலையில் பள்ளங்கள் ஏற்பட்டு சாலையின் நிலை மோசமாக உள்ளதால் பொதுமக்கள் உடனடி நடவடிக்கை தேவை என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
விக்கிரவாண்டி-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் கும்பகோணம்-சோழபுரம் பகுதிகளின் பணிகள் முடிந்து விரைவில் திறப்பு விழா நடைபெற உள்ளது. ஆனால், விக்கிரவாண்டியிலிருந்து பின்னலூருக்கு செல்லும் சாலையில் ஒப்பந்ததாரர் நியமனம் செய்யப்படாமல் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. டில்லியில் நடைபெற்ற டெண்டர் மூலம் புதிய ஒப்பந்ததாரர் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், பணிக்கான பட்ஜெட் விரைவில் ஒதுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நேரத்தில், கடந்த பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பேட்ச் ஒர்க் செய்ததாகும். ஆனால், குறிப்பாக விக்கிரவாண்டியிலிருந்து கோலியனூர் கூட்ரோடு வரை 13 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பள்ளங்கள் போதிய முறையில் சரி செய்யப்படவில்லை. இரவு நேரங்களில் இரு சக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்துள்ளதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். நகாய் நிர்வாகம் 7 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்த நிலையிலும் சிறிய பள்ளங்கள் சரி செய்யப்படாமல் இருப்பது மக்களிடையே அதிருப்தி ஏற்படுத்தியுள்ளது.
பாதுகாப்பு தடுப்பு சுவர் உள்ளிட்ட சாலையின் தேவையான பகுதிகளில் பூரண சீரமைப்பு செய்ய அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.