டாடா மோட்டார்ஸ் வணிக வாகனங்களின் விலை ஏப்ரல் முதல் அதிரடியாக உயர்வு
March 16, 2026

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது வர்த்தக வாகனங்களின் விலையை வரும் ஏப்ரல் 1 முதல் 1.5 சதவீதம் வரை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. உற்பத்தி மற்றும் மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பால் ஏற்படும் நிதிச் சுமையை ஈடுகட்ட இந்த விலை உயர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய வாகன உற்பத்தி நிறுவனமான டாடா மோட்டார்ஸ், வாகனத்தின் மாடலைப் பொறுத்து இந்த விலை மாற்றம் மாறுபடும் எனத் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து மும்பை பங்குச் சந்தையில் அந்நிறுவனத்தின் பங்குகள் கணிசமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.