சிங்கப்பூர் சென்ற INS நிஸ்தார்! ‘பசிபிக் ரீச்-2025’இல் பங்கேற்கிறது இந்திய கடற்படை

இந்திய கடற்படையின் புதிய கப்பலான INS நிஸ்தார், முதல்முறையாக சிங்கப்பூர் வந்தடைந்துள்ளது. இன்று தொடங்கும் ‘பசிபிக் ரீச்-2025’ என்ற பன்னாட்டு கடற்படை பயிற்சியில் இந்தக் கப்பல் பங்கேற்கவுள்ளது. 40க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கும் இந்த பயிற்சி தென் சீனக் கடலில் நடைபெற உள்ளது. இந்தியாவின் தற்சார்பு திறனுக்கு சான்றாக, இந்தக் கப்பல் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 18 அன்று கடற்படையில் இணைக்கப்பட்ட இந்தக் கப்பல், 80% க்கும் மேற்பட்ட உள்நாட்டு தொழில்நுட்பத்தைக் கொண்டு கட்டப்பட்டுள்ளது. ஆழ்கடலில் நீர்மூழ்கிக் கப்பல் மீட்பு வாகனங்களை (DSRV) சுமந்து செல்லும் திறன் கொண்டது. எரிபொருள் நிரப்பாமல் 60 நாட்கள் தொடர்ந்து பயணிக்கக்கூடியது. இந்த பயிற்சியில் பங்கேற்பதன் மூலம், இந்தியா தனது கடல்சார் திறனையும், சர்வதேச கூட்டாண்மையையும் வலுப்படுத்துகிறது.