சமைத்த சோற்றுப் பானையில் கால்களை வைத்து உறங்கிய ஊழியர் ஹாஸ்டல் கேண்டீன் வீடியோ வைரலால் பரபரப்பு

தெலுங்கானாவில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரி விடுதி கேண்டீனில் அதிர்ச்சி தரும் சம்பவம் நடந்துள்ளது. சமைத்த சாதம் நிரப்பப்பட்ட பெரிய அண்டாவில் தனது கால்களை வைத்து, ஒரு தற்காலிக ஊழியர் மதுபோதையில் உறங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இரவு உணவுக்காகச் சென்ற ஒரு மாணவர் இதனை 28 வினாடி வீடியோவாகப் பதிவு செய்தார்.
போதையில் இருந்த அந்த ஊழியர், சோறு இருக்கும் அண்டாவுக்குள் கால்களை வைத்து படுத்திருப்பதை அந்த வீடியோ காட்டுகிறது. இந்தச் சம்பவம் விடுதி அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டவுடன், அந்த ஊழியர் உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டார். இந்த அசுத்தமான மற்றும் பொறுப்பற்ற செயலுக்காக மாவட்ட ஆட்சியர் அந்த ஊழியரை பணிநீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவம் கல்லூரி வளாகத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
This is so distrusting:
— Indian Ranger 🇮🇳 (@India_Ranger) November 14, 2025
A drunken man in government polytechnic college of ismailkhanpet in Telangana found keeping his legs in the rice bowl.
He was fully drunk and had no-senses. Strict actions must be taken. pic.twitter.com/4u94BWFFfa