சமூகத்தில் அதிர்ச்சி: ‘மார்பைப் பிடித்தல் பாலியல் வன்கொடுமை அல்ல’ – உயர் நீதிமன்ற தீர்ப்பை சரிபார்க்கும் உச்ச நீதிமன்றம்

அலகாபாத் உயர் நீதிமன்றம் சிறார் பாலியல் தாக்குதல் வழக்கில் அளித்த சர்ச்சைக்குரிய தீர்ப்பு சமீபத்தில் கடுமையான விமர்சனங்களை எழுப்பியது. குறித்த தீர்ப்பில், பெண்களின் மார்பைப் பிடிப்பதும் அல்லது ஆடையை கிழிப்பதும் தனித்து பாலியல் வன்கொடுமையாகக் கருதப்படாது எனக் கூறப்பட்டது. இந்த தீர்ப்பு சமூகத்தின் பல்வேறு தரப்புகளில் கடும் எதிர்ப்பை சந்தித்தது.
சமூக ஆர்வலர்கள், மகளிர் உரிமை அமைப்புகள் மற்றும் அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் இந்த தீர்ப்பிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதை தொடர்ந்து, உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து, அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை மேல் விசாரணைக்கு எடுத்துக்கொண்டு விசாரணை மேற்கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை பல்வேறு தரப்பினரின் எதிர்ப்பை கருத்தில் கொண்டது எனக் கூறப்படுகிறது.