சபாநாயகர் ஓம் பிர்லாவிற்கு எதிராக எதிர்க்கட்சிகளின் அதிரடி தீர்மானம் மற்றும் நாடாளுமன்றத்தில் இன்று கடும் மோதல்

சபாநாயகர் ஓம் பிர்லாவிற்கு எதிராக எதிர்க்கட்சிகளின் அதிரடி தீர்மானம் மற்றும் நாடாளுமன்றத்தில் இன்று கடும் மோதல்

பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் அமர்வு இன்று தொடங்கும் நிலையில், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை பதவியிலிருந்து நீக்கக் கோரி எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ள தீர்மானம் விவாதத்திற்கு வருகிறது. சபாநாயகர் ஒருதலைப்பட்சமாகச் செயல்படுவதாகக் கூறி காங்கிரஸ் மற்றும் திமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் இந்த நோட்டீஸை அளித்துள்ளன. இதனால் அவையில் இன்று கடும் அமளி ஏற்படும் என்பதால், ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் தங்களது எம்.பி.க்களுக்கு கட்டாய விப் உத்தரவு பிறப்பித்துள்ளன.

மத்திய கிழக்கு போர் பதற்றம் மற்றும் இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று அறிக்கை தாக்கல் செய்கிறார். மேலும், விவசாயப் பாதிப்பு மற்றும் வாக்காளர் பெயர் நீக்கம் உள்ளிட்ட விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. ஆளும் கூட்டணிக்கு பெரும்பான்மை பலம் இருந்தாலும், சபாநாயகருக்கு எதிரான இந்தத் தீர்மானம் மற்றும் பல்வேறு மக்கள் பிரச்சினைகளால் இன்றைய நாடாளுமன்றக் கூட்டம் மிகவும் பரபரப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *