கேப்டன் பதவி ஒன்றே போதாது! சூர்யகுமார் யாதவிற்கு கம்பீர் விடுத்த அதிரடி எச்சரிக்கை

இந்திய டி20 அணியில் ஷுப்மான் கில் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, கேப்டன் சூர்யகுமார் யாதவிற்கும் நிர்வாகம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த ஆண்டில் 19 இன்னிங்ஸ்களில் வெறும் 13.62 சராசரியுடன் விளையாடி வரும் சூர்யா, கேப்டன் என்ற காரணத்திற்காக மட்டுமே அணியில் நீடிப்பதாகத் தெரிகிறது. கடந்த கால சாதனைகளை விட தற்போதைய ஃபார்மே முக்கியம் என பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெளிவுபடுத்தியுள்ளார்.
நியூசிலாந்து தொடரில் ஃபார்மிற்கு திரும்பாவிட்டால், உலகக்கோப்பைக்குப் பிறகு அணியில் அவரது இடம் கேள்விக்குறியாகும் என நிர்வாகம் கூறியுள்ளது. ரன்கள் குவிக்கத் தவறினால் டிரெஸ்ஸிங் ரூமில் மரியாதையை இழக்க நேரிடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. சூர்யா மீண்டு வருவார் என்ற நம்பிக்கை தெரிவித்தாலும், கம்பீரின் இந்த ‘பெர்பார்மன்ஸ் அல்லது வெளியேற்றம்’ என்ற கொள்கை அணியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.