கிங் சார்லஸ் கொடுத்த சிறப்புப் பரிசு; பிரதமர் மோடியின் 75வது பிறந்தநாளில் இந்திய-பிரிட்டன் நட்பு வலுப்பட்டது

பிரதமர் நரேந்திர மோடி தனது 75வது பிறந்தநாளில் பிரிட்டன் மன்னர் III சார்லஸ் அனுப்பிய சிறப்புப் பரிசான கடம்ப மரக்கன்றை தனது இல்லத்தில் நட்டார். இந்தப் பரிசு இரு நாடுகளுக்கும் இடையிலான நட்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான கூட்டு உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகிறது. பிரிட்டிஷ் உயர் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தப் பரிசு பிரதமர் மோடியின் ‘ஓர் மரம் தாயின் பெயரால்’ என்ற பிரச்சாரத்தால் ஈர்க்கப்பட்டது என்றும், இது இரு நாடுகளின் பரஸ்பர விழுமியங்களைப் பிரதிபலிக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளது.
கடந்த ஜூலை மாதம், பிரதமர் மோடி தனது பிரிட்டன் பயணத்தின்போது, கிங் சார்லஸுக்கு ‘சோனோமா’ மரக்கன்றை பரிசாக அளித்திருந்தார். அப்போது, இரு தலைவர்களும் இந்தியா-பிரிட்டன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து விவாதித்தனர். பிரதமர் மோடிக்கு அவரது பிறந்தநாளில் அமெரிக்கா, ரஷ்யா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உட்பட பல உலகத் தலைவர்களிடமிருந்தும் வாழ்த்துகள் குவிந்தன.