கள்ளக்காதலனுடன் இருந்த தாயை பார்த்த மகன் கொலை! உ.பி.யில் அதிர்ச்சி சம்பவம்

கள்ளக்காதலனுடன் இருந்த தாயை பார்த்த மகன் கொலை! உ.பி.யில் அதிர்ச்சி சம்பவம்

உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தில், இரண்டு குழந்தைகளைக் கொண்ட விதவைத் தாயின் 10 வயது மகனை, அவரது காதலன் கொலை செய்துள்ளான். இரண்டு ஆண்டுகளுக்கு முன் கணவரை இழந்த அந்தப் பெண், வேறு சமூகத்தைச் சேர்ந்த ஃபைசான் என்பவருடன் ரகசிய உறவு வைத்திருந்தார். இறந்த சிறுவன் சூரஜ் சர்மா, தனது தாய் சோனா சர்மாவை காதலன் ஃபைசானுடன் ஆட்சேபகரமான நிலையில் பார்த்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதன் காரணமாகவே ஃபைசான் சூரஜை கழுத்தை நெரித்துக் கொன்றதாகக் கூறப்படுகிறது. செவ்வாய்க்கிழமை இரவு ஃபைசானை கைது செய்ய முயன்றபோது, அவன் போலீஸாரின் பிஸ்டலைப் பறித்துக்கொண்டு தப்பியோட முயன்றான். அப்போது போலீசார் அவனது காலில் சுட்டு காயப்படுத்திப் பிடித்தனர். மருத்துவமனையில் சிகிச்சையளிக்கும் போது அவன் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டான். இந்தக் கொலையில் சூரஜின் தாய் சோனா சர்மாவுக்கும் தொடர்பு உள்ளதா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *