கரூர் விபத்தில் செந்தில் பாலாஜிக்கு தொடர்பு உண்டா விஜயிடம் சிபிஐ நடத்திய அதிரடி விசாரணை
March 15, 2026

கரூர் தவெக மாநாட்டில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, அக்கட்சியின் தலைவர் விஜயிடம் சிபிஐ மூன்றாவது முறையாக விசாரணை நடத்தியது. டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரான அவரிடம், இந்த துயர சம்பவத்திற்கும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் என்ன தொடர்பு என்பது குறித்து தீவிரமாக கேள்விகள் எழுப்பப்பட்டன.
முந்தைய விசாரணைகளில் விஜய் அளித்த பதில்கள் திருப்திகரமாக இல்லை என கூறப்படும் நிலையில், இந்த விசாரணை முக்கியத்துவம் பெறுகிறது. செந்தில் பாலாஜி மீது தவெக தரப்பில் புகார் அளிக்கப்பட்டிருந்த சூழலில், எதன் அடிப்படையில் இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது என்பதை சிபிஐ அதிகாரிகள் விரிவாகக் கேட்டறிந்தனர். இந்த வழக்கின் அடுத்தகட்ட நகர்வுகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.