கன்சிராமிற்கு மரணத்திற்குப் பின் பாரத ரத்னா வழங்க கோரி பிரதமருக்கு ராகுல் காந்தி கடிதம்
March 15, 2026

பிஎஸ்பி நிறுவனர் கன்சிராமின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு நாட்டின் உயரிய விருதான ‘பாரத ரத்னா’ வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார். இந்திய அரசியலில் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாகத் திகழ்ந்த கன்சிராமின் பங்களிப்பை அங்கீகரிக்க வேண்டியது அவசியம் என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
சமூக நீதிக்காகவும் விளிம்புநிலை மக்களின் அரசியல் அதிகாரத்திற்காகவும் கன்சிராம் ஆற்றிய தொண்டு மகத்தானது என்று ராகுல் புகழாரம் சூட்டியுள்ளார். கோடிக்கணக்கான மக்களின் விருப்பத்தை ஏற்று அரசு இந்த கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார். லக்னோவில் நடந்த சமீபத்திய சந்திப்பிலும் இந்த கோரிக்கை வலுவாக முன்வைக்கப்பட்டதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.