கட்டிட திட்ட அனுமதி இணையதள மாற்றம்: ஏப்ரல் 1 முதல் புதிய நடைமுறை

சென்னை மாநகராட்சியில் கட்டிட திட்ட அனுமதி பெறும் நடைமுறையில் முக்கிய மாற்றம் செய்யப்பட உள்ளது. ஏப்ரல் 1ம் தேதி முதல், கட்டிட திட்ட அனுமதி விண்ணப்பங்கள் புதிய இணையதளத்தின் மூலம் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையில், இதுவரை கட்டிட திட்ட அனுமதி விண்ணப்பங்கள் “கட்டிட திட்ட ஒப்புதல் நிகழ்நிலை அமைப்பு” வழியாக செயல்படுத்தப்பட்டு வந்ததாகவும், பொதுமக்களுக்கு வசதியாக இந்த சேவையை மேம்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு ஒற்றைசாளர போர்ட்டலில் (onlineppa.tn.gov.in) ஒருங்கிணைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
31.3.2025 மற்றும் அதற்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து விண்ணப்பங்களும் பழைய நடைமுறையின்படி பரிசீலிக்கப்படும். புதிய விண்ணப்பதாரர்கள் ஏப்ரல் 1 முதல் புதிய இணையதளத்திலேயே விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.